திருநொடித்தான்மலை

bookmark

பண் - பஞ்சமம்

திருச்சிற்றம்பலம்

1017

தானெனை முன்படைத் தானத

றிந்துதன் பொன்னடிக்கே
நானென பாடலந் தோநாயி

னேனைப் பொருட்படுத்து
வானெனை வந்தெதிர் கொள்ளமத்

தயானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய் தான்நொடித்

தான்மலை உத்தமனே.

7.100.1

1018

ஆனை உரித்த பகைஅடி

யேனொடு மீளக்கொலோ
ஊனை உயிர்வெருட் டிஒள்ளி

யானை நினைந்திருந்தேன்
வானை மதித்தம ரர்வலஞ்

செய்தெனை ஏறவைக்க
ஆனை அருள்புரிந் தான்நொடித்

தான்மலை உத்தமனே.

7.100.2

1019

மந்திரம் ஒன்றறி யேன்மனை

வாழ்க்கை மகிழ்ந்தடியேன்
சுந்தர வேடங்க ளாற்றுரி சேசெயுந்

தொண்டனெனை
அந்தர மால்விசும் பில்அழ

கானை அருள்புரிந்த
துந்தர மோநெஞ்ச மேநொடித்

தான்மலை உத்தமனே.

7.100.3

1020

வாழ்வை உகந்தநெஞ் சேமட

வார்தங்கள் வல்வினைப்பட்
டாழ முகந்தவென் னைஅது

மாற்றி அமரரெல்லாஞ்
சூழ அருள்புரிந் துதொண்ட

னேன்பரம் அல்லதொரு
வேழம் அருள்புரிந் தான்நொடித்

தான்மலை உத்தமனே.

7.100.4

1021

மண்ணுல கிற்பிறந் துநும்மை

வாழ்த்தும் வழியடியார்
பொன்னுல கம்பெறு தல்தொண்ட

னேனின்று கண்டொழிந்தேன்
விண்ணுல கத்தவர் கள்விரும்

பவெள்ளை யானையின்மேல்
என்னுடல் காட்டுவித் தான்நொடித்

தான்மலை உத்தமனே.

7.100.5

1022

அஞ்சினை ஒன்றிநின் றுஅலர்

கொண்டடி சேர்வறியா
வஞ்சனை யென்மன மேவைகி

வானநன் னாடர்முன்னே
துஞ்சுதல் மாற்றுவித் துத்தொண்ட

னேன்பர மல்லதொரு
வெஞ்சின ஆனைதந் தான்நொடித்

தான்மலை உத்தமனே.

7.100.6

1023

நிலைகெட விண்ணதி ரநில

மெங்கும் அதிர்ந்தசைய
மலையிடை யானையே றிவழி

யேவரு வேன்எதிரே
அலைகட லால்அரை யன்அலர்

கொண்டுமுன் வந்திறைஞ்ச
உலையணை யாதவண் ணம்நொடித்

தான்மலை உத்தமனே.

7.100.7

1024

அரவொலி ஆகமங் கள்அறி

வாரறி தோத்திரங்கள்
விரவிய வேதஒ லிவிண்ணெ

லாம்வந் தெதிர்ந்திசைப்ப
வரமலி வாணன்வந் துவழி

தந்தெனக் கேறுவதோர்
சிரமலி யானைதந் தான்நொடித்

தான்மலை உத்தமேனே.

7.100.8

1025

இந்திரன் மால்பிர மன்னெழி

லார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன் னைமத்த

யானை அருள்புரிந்து
மந்திர மாமுனி வர்இவ னாரென

எம்பெருமன்
நந்தமர் ஊரனென் றான்நொடித்

தான்மலை உத்தமனே.

7.100.9

1026

ஊழிதோ றூழிமுற் றுமுயர்

பொன்னொடித் தான்மலையைச்
சூழிசை யின்கரும் பின்சுவை

நாவல ஊரன்சொன்ன
ஏழிசை இன்றமி ழால்இசைந்

தேத்திய பத்தினையும்
ஆழி கடலரை யாஅஞ்சை

யப்பர்க் கறிவிப்பதே.
* நொடித்தான்மலையென்பது - கயிலைமலை.

7.100.10

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்திசுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப்பதிகங்கள் ஏழாம் திருமுறை முற்றும்.