என் மீட்பர் உயிரோடிருக்கையிலே
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்
கென்ன குறையுண்டு நீ சொல், மனமே
1. என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்,
என்னோடிருக்கவே எழுத்திருந்தோர்
விண்ணுலகுயர்ந்தோர், உன்னதஞ்சிறந்தோர்,
மித்திரனே சுகபத்திர மருளும்.
-என் மீட்பர்
2. பாபமோ, மரணமோ, நரகமோ, பேயோ,
பயந்து நடுங்கிட ஜெயஞ் சிறந்தோர்,
சாபமே தீர்த்தோர் சற்குருநாதன்:
சஞ்சலமினியேன்? நெஞ்சமே, மகிழாய்.
-என் மீட்பர்
3. ஆசிசெய்திடுவார், அருள்மிக அளிப்பார்,
அம்பரத் தனிலெனக்காய் ஜெபிப்பார்:
மோட்சமே மறைப்பார், முன்னமே நடப்பார்,
மோட்ச வழி சத்யம் வாசல் உயிரெனும்.
-என் மீட்பர்
4. கவலைகள் தீர்ப்பார், கண்ணீர் துடைப்பார்:
கடைசி மட்டுங் கைவிடாதிருப்பார்:
பவமனிப்பளிப்பார், பாக்கியங் கொடுப்பார்,
பரம பதவியினுற் என்றனை எடுப்பார்.
-என் மீட்பர்
5. போனது போகட்டும், புவி வசை பேசட்டும்,
பொல்லான் அம்புகளெய்திடட்டும்,
ஆனது ஆகட்டும், அருள்மழை பெய்திடும்,
அன்புமிகும் பேரின்ப மெனக்கருள்.
-என் மீட்பர்.
