திருவெண்காடு

bookmark

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

052

படங்கொள் நாகஞ் சென்னி சேர்த்திப்

பாய்பு லித்தோல் அரையில் வீக்கி
அடங்க லார்ஊர் எரியச் சீறி

அன்று மூவர்க் கருள்பு ரிந்தீர்
மடங்க லானைச் செற்று கந்தீர்

மனைகள் தோறுந் தலைகை யேந்தி
விடங்க ராகித் திரிவ தென்னே

வேலை சூழ்வெண் காட னீரே.

7.6.01

053

இழித்து கந்தீர் முன்னை வேடம்

இமைய வர்க்கும் உரைகள் பேணா
தொழித்து கந்தீர் நீர்முன் கொண்ட

உயர்த வத்தை அமரர் வேண்ட
அழிக்க வந்த காம வேளை

அவனு டைய தாதை காண
விழித்து கந்த வெற்றி யென்னே

வேலை சூழ்வெண் காட னீரே.

7.6.02

054

படைகள் ஏந்திப் பாரி டமும்

பாதம் போற்ற மாதும் நீரும்
உடையோர் கோவ ணத்த ராகி

உண்மை சொல்லீர் உம்மை யன்றே
சடைகள் தாழக் கரணம் இட்டுத்

தன்மை பேசி இல்ப லிக்கு
விடைய தேறித் திரிவ தென்னே

வேலை சூழ்வெண் காட னீரே.

7.6.03

055

பண்ணு ளீராய்ப் பாட்டு மானீர்

பத்தர் சித்தம் பரவிக் கொண்டீர்
கண்ணு ளீராய்க் கருத்தி லும்மைக்

கருது வார்கள் காணும் வண்ணம்
மண்ணு ளீராய் மதியம் வைத்தீர்

வான நாடர் மருவி யேத்த
விண்ணு ளீராய் நிற்ப தென்னே

வேலை சூழ்வெண் காட னீரே.

7.6.04

056

குடமெ டுத்து நீரும் பூவுங்

கொண்டு தொண்டர் ஏவல் செய்ய
நடமெ டுத்தொன் றாடிப் பாடி

நல்கு வீர்நீர் புல்கும் வண்ணம்
வடமெ டுத்த கொங்கை மாதோர்

பாக மாக வார்க டல்வாய்
விடம்மி டற்றில் வைத்த தென்னே

வேலை சூழ்வெண் காட னீரே.

7.6.05

057

மாறு பட்ட வனத்த கத்தில்

மருவ வந்த வன்க ளிற்றைப்
பீறி இட்ட மாகப் போர்த்தீர்

பெய்ப லிக்கென் றில்லந் தோறுங்
கூறு பட்ட கொடியும் நீருங்

குலாவி ஏற்றை அடர ஏறி
வேறு பட்டுத் திரிவ தென்னே

வேலை சூழ்வெண் காட னீரே.

7.6.06

058

காத லாலே கருதுந் தொண்டர்

கார ணத்தீ ராகி நின்றே
பூதம் பாடப் புரிந்து நட்டம்

புவனி யேத்த ஆட வல்லீர்
நீதி யாக ஏழி லோசை

நித்த ராகிச் சித்தர் சூழ
வேத மோதித் திரிவ தென்னே

வேலை சூழ்வெண் காட னீரே.

7.6.07

059

குரவு கொன்றை மதியம் மத்தங்

கொங்கை மாதர் கங்கை நாகம்
விரவு கின்ற சடையு டையீர்

விருத்த ரானீர் கருத்தில் உம்மைப்
பரவும் என்மேல் பழிகள் போக்கீர்

பாக மாய மங்கை யஞ்சி
வெருவ வேழஞ் செற்ற தென்னே

வேலை சூழ்வெண் காட னீரே.

7.6.08

060

மாடங் காட்டுங் கச்சி யுள்ளீர்

நிச்ச யத்தால் நினைப்பு ளார்பாற்
பாடுங் காட்டில் ஆடல் உள்ளீர்

பரவும் வண்ணம் எங்ங னேதான்
நாடுங் காட்டில் அயனும் மாலும்

நணுகா வண்ணம் அனலு மாய
வேடங் காட்டித் திரிவ தென்னே

வேலை சூழ்வெண் காட னீரே.

7.6.09

061

விரித்த வேதம் ஓத வல்லார்

வேலை சூழ்வெண் காடு மேய
விருத்த னாய வேதன் றன்னை

விரிபொ ழிற்றிரு நாவ லூரன்
அருத்தி யாலா ரூரன் தொண்டன்

அடியன் கேட்ட மாலை பத்துந்
தெரித்த வண்ணம் மொழிய வல்லார்

செம்மை யாளர் வானு ளாரே.

7.6.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுவேதாரணியேசுவரர்,
தேவியார் - பிரமவித்தியாநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்