நமக்கடிகளாகிய - அடிகள்

bookmark

பண் - கொல்லி

திருச்சிற்றம்பலம்

330

பாறுதாங்கிய காடரோபடு

தலையரோமலைப் பாவையோர்
கூறுதாங்கிய குழகரோகுழைக்

காதரோகுறுங் கோட்டிள
ஏறுதாங்கிய கொடியரோசுடு

பொடியரோஇலங் கும்பிறை
ஆறுதாங்கிய சடையரோநமக்

கடிகளாகிய அடிகளே.

7.33.1

331

இட்டிதாகவந் துரைமினோநுமக்

கிசையுமாநினைந் தேத்துவீர்
கட்டிவாழ்வது நாகமோசடை

மேலும்நாறு கரந்தையோ
பட்டியேறுகந் தேறரோபடு

வெண்டலைப்பலி கொண்டுவந்
தட்டியாளவுங் கிற்பரோநமக்

கடிகளாகிய அடிகளே.

7.33.2

332

ஒன்றினீர்கள்வந் துரைமினோநுமக்

கிசையுமாநினைந் தேத்துவீர்
குன்றிபோல்வதோ ருருவரோகுறிப்

பாகிநீறுகொண் டணிவரோ
இன்றியேயிலர் ஆவரோஅன்றி

உடையராயிலர் ஆவரோ
அன்றியேமிக அறவரோநமக்

கடிகளாகிய அடிகளே.

7.33.3

333

தேனையாடுமுக் கண்ணரோமிகச்

செய்யரோவெள்ளை நீற்றரோ
பானெய்ஆடலும் பயில்வரோதமைப்

பற்றினார்கட்கு நல்லரோ
மானைமேவிய கண்ணினாள்மலை

மங்கைநங்கையை அஞ்சவோர்
ஆனையீருரி போர்ப்பரோநமக்

கடிகளாகிய அடிகளே.

7.33.4

334

கோணல்மாமதி சூடரோகொடு

கொட்டிகாலர் கழலரோ
வீணைதானவர் கருவியோ

விடையேறுவேத முதல்வரோ
நாணதாகவோர் நாகங்கொண்டரைக்

கார்ப்பரோநல மார்தர
ஆணையாகநம் மடிகளோநமக்

கடிகளாகிய அடிகளே.

7.33.5

335

வந்துசொல்லுமின் மூடனேனுக்கு

வல்லவாநினைந் தேத்துவீர்
வந்தசாயினை அறிவரோதம்மை

வாழ்த்தினார்கட்கு நல்லரோ
புந்தியாலுரை கொள்வரோஅன்றிப்

பொய்யில்மெய்யுரைத் தாள்வரோ
அன்றியேமிக அறவரோநமக்

கடிகளாகிய அடிகளே.

7.33.6

336

மெய்யென்சொல்லுமின் நமரங்காளுமக்

கிசையுமாநினைந் தேத்துவீர்
கையிற்சூலம துடையரோகரி

காடரோகறைக் கண்டரோ
வெய்யபாம்பரை ஆர்ப்பரோவிடை

ஏறரோகடை தோறுஞ்சென்
றையங்கொள்ளுமவ் வடிகளோநமக்

கடிகளாகிய அடிகளே.

7.33.7

337

நீடுவாழ்பதி உடையரோஅயன்

நெடியமாலுக்கு நெடியரோ
பாடுவாரையும் உடையரோதமைப்

பற்றினார்கட்கு நல்லரோ
காடுதானரங் காகவேகைகள்

எட்டினோடில யம்பட
ஆடுவாரெனப் படுவரோநமக்

கடிகளாகிய அடிகளே.

7.33.8

338

நமணநந்தியுங் கருமவீரனுந்

தருமசேனனு மென்றிவர்
குமணமாமலைக் குன்றுபோனின்று

தங்கள்கூறையொன் றின்றியே
ஞமணஞாஞண ஞாணஞோணமென்

றோதியாரையு நாணிலா
அமணராற்பழிப் புடையரோநமக்

கடிகளாகிய அடிகளே.

7.33.9

339

படிசெய்நீர்மையிற் பத்தர்காள்பணிந்

தேத்தினேன்பணி யீரருள்
வடிவிலான்றிரு நாவலூரன்

வனப்பகையப்பன் வன்றொண்டன்
செடியனாகிலுந் தீயனாகிலுந்

தம்மையேமனஞ் சிந்திக்கும்
அடியனூரனை ஆள்வரோநமக்

கடிகளாகிய அடிகளே.

7.33.10

திருச்சிற்றம்பலம்