தோத்திரம் செய்வேனே

bookmark

தோத்திரம் செய்வேனே - ரட்சகனைத்
தோத்திரம் செய்வேனே
 
பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்த
பார்த்திபனை  யூதக் கோத்திரனை என்றும்

    

1. அன்னை மரி சுதனை - புல் மீது
அமிழ்துக் கழுதவனை
முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை
முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை

  

2. கந்தை பொதிந்தவனை - வானோர்களும்
வந்தடி பணிபவனை
மந்தையர்க் கானந்த மாட்சியளித்தோனை
மான பரன் என்னும் ஞான குணவானை

 

3. செம்பொன் னுருவானைத் - தேசிகர்கள்
தேடும் குருவானை
அம்பர மேவிய உம்பர் கணத்தோடு
அன்பு பெற நின்று  பைம் பொன் மலர் தூவி.