துதித்துப்பாடிட பாத்திரமே

bookmark

துதித்துப்பாடிட பாத்திரமே

துங்கவன் இயேசுவின் நாமமதே

துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்

தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே

           

ஆ! அற்புதமே அவர் நடத்துதலே

ஆனந்தமே பரமானந்த்தமே

நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதே

நாம் அல்லேலூயா துதி சாற்றிடிவோம்

 

கடந்த நாட்களில் கண்மணிபோல்

கருத்துடன் நம்மை காத்தாரே

கர்த்தரையே நம்பி  ஜீவித்திட

கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்தரிப்போமே      -(ஆ!

 

இந்த வனாந்திர யாத்திரையில்

இன்பராம் இயேசு நம்மோடிப்பார்

போகையிலும் நம் வருகையிலும்

புகலிடம் ஆனதால் ஸ்தோத்தரிப்போமே         -(ஆ!