உம்மை நம்பி உந்தன் பாதம்

bookmark

உம்மை நம்பி உந்தன் பாதம்
உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம்
ஒருபோதும் கைவிடமாட்டீர் - 2
 
1.   கண்ணீரைத் துடைத்து
கரங்களைப் பிடித்து
காலமெல்லாம் காத்துக் கொண்டீர்
 
2.   மகனாக மகளாக
அப்பா என்றழைக்கும்
உரிமையை எனக்குத் தந்தீர்
 
3.   அச்சாரமாய் முத்திரையாய்
அபிஷேக வல்லமையை
அடிமைக்குத் தந்தீரே
 
4.   குருடர்கள் பார்த்தார்கள்
செவிடர்கள் கேட்டார்கள்
முடவர்கள் நடந்தார்கள்