இயேசுவை நோக்கி
இயேசுவை நோக்கி பார்த்திடுவோம்
அவரையே கண்முன் நிறுத்திடுவோம்
அவர் செயல்களுக்காய் பாடிடுவோம்
அவர் நினைவாக வாழ்ந்திடுவோம்
ஆமென் அல்லேலூயா - 4
1. நம் கால் இடற விடமாட்டார்
நம்மைக் காப்பவர் உறங்க மாட்டார்
நம் தேவன் அவரோ அயர்வதில்லை
நம் நினைவாக வாழ்கின்றார்
-ஆமென்
2. போகும் போதும் காக்கின்றார்
திரும்பும் போதும் காக்கின்றார்
இப்போதும் எப்போதும் காக்கின்றார்
இனியும் நமக்கு பயமேது
-ஆமென்
3. நம்துன்பம் கண்டு கலங்குகிறார்
நமக்காய் கண்ணீர் வடிக்கின்றார்
நம்பாவம் அனைத்தும் சுமந்து கொண்டு
நமக்காய் பரிந்து பேசுகின்றார்
- ஆமென்
