திருவாஞ்சியம்

bookmark

பண் - பியந்தைக்காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

771

பொருவ னார்புரி நூலர்

புணர்முலை உமையவ ளோடு
மருவ னார்மரு வார்பால்

வருவதும் இல்லைநம் அடிகள்
திருவ னார்பணிந் தேத்துந்

திகழ்திரு வாஞ்சியத் துறையும்
ஒருவ னார்அடி யாரை

ஊழ்வினை நலிய வொட்டாரே.

7.76.1

772

தொறுவில் ஆனிள ஏறு

துண்ணென இடிகுரல் வெருவிச்
செறுவில் வாளைகள் ஓடச்

செங்கயல் பங்கயத் தொதுங்கக்
கறுவி லாமனத் தார்கள்

காண்டகு வாஞ்சியத் தடிகள்
மறுவி லாதவெண் ணீறு

பூசுதல் மன்னுமொன் றுடைத்தே.

7.76.2

773

தூர்த்தர் மூவெயி லெய்து

சுடுநுனைப் பகழிய தொன்றாற்
பார்த்த னார்திரள் தோள்மேற்

பன்னுனைப் பகழிகள் பாய்ச்சித்
தீர்த்த மாமலர்ப் பொய்கைத்

திகழ்திரு வாஞ்சியத் தடிகள்
சாத்து மாமணிக் கச்சங்

கொருதலை பலதலை யுடைத்தே.

7.76.3

774

சள்ளை வெள்ளையங் குருகு

தானது வாமெனக் கருதி
வள்ளை வெண்மலர் அஞ்சி

மறுகியோர் வாளையின் வாயில்
துள்ளு தெள்ளுநீர்ப் பொய்கைத்

துறைமல்கு வாஞ்சியத் தடிகள்
வெள்ளை நுண்பொடிப் பூசும்

விகிர்தமொன் றொழிகிலர் தாமே.

7.76.4

775

மைகொள் கண்டர்எண் டோ ளர்

மலைமக ளுடனுறை வாழ்க்கைக்
கொய்த கூவிள மாலை

குலவிய சடைமுடிக் குழகர்
கைதை நெய்தலங் கழனி

கமழ்புகழ் வாஞ்சியத் தடிகள்
பைதல் வெண்பிறை யோடு

பாம்புடன் வைப்பது பரிசே.

7.76.5

776

கரந்தை கூவிள மாலை

கடிமலர்க் கொன்றையுஞ் சூடிப்
பரந்த பாரிடஞ் சூழ

வருவர்நம் பரமர்தம் பரிசால்
திருந்து மாடங்கள் நீடு

திகழ்திரு வாஞ்சியத் துறையும்
மருந்த னார்அடி யாரை

வல்வினை நலிய வொட்டாரே.

7.76.6

777

அருவி பாய்தரு கழனி

அலர்தரு குவளையங் கண்ணார்
குருவி யாய்கிளி சேப்பக்

குருகினம் இரிதரு கிடங்கிற்
பருவ ரால்குதி கொள்ளும்

பைம்பொழில் வாஞ்சியத் துறையும்
இருவ ராலறி யொண்ணா

இறைவன தறைகழல் சரணே.

7.76.7

778

களங்க ளார்தரு கழனி

அளிதரக் களிதரு வண்டு
உளங்க ளார்கலிப் பாடல்

உம்பரில் ஒலித்திடுங் காட்சி
குளங்க ளானிழற் கீழ்நற்

குயில்பயில் வாஞ்சியத் தடிகள்
விளங்கு தாமரைப் பாதம்

நினைப்பவர் வினைநலி விலரே.

7.76.8

779

வாழை யின்கனி தானும்

மதுவிம்மு வருக்கையின் சுளையுங்
கூழை வானரந் தம்மிற்

கூறிது சிறிதெனக் குழறித்
தாழை வாழையந் தண்டாற்

செருச்செய்து தருக்குவாஞ் சியத்துள்
ஏழை பாகனை யல்லால்

இறையெனக் கருதுத லிலமே.

7.76.9

780

செந்நெ லங்கலங் கழனித்

திகழ்திரு வாஞ்சியத் துறையும்
மின்ன லங்கலஞ் சடையெம்

இறைவன தறைகழல் பரவும்
பொன்ன லங்கனல் மாடப்

பொழிலணி நாவலா ரூரன்
பன்ன லங்கனல் மாலை

பாடுமின் பத்தரு ளீரே.

7.76.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுகவாஞ்சிநாதர்,
தேவியார் - வாழவந்தநாயகி.

திருச்சிற்றம்பலம்