வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து

bookmark

வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி
திருப்தியாக்கும் உம் கிருபையினால்
 
காலைதோறும் களிகூர்ந்து மகிழும்படி
திருப்தியாக்கும் உம் கிருபையினால்
 
1. புகலிடம் நீரே பூமியிலே
    அடைக்கலம் நீரே தலைமுறை தோறும் (2)
    நல்லவரே வல்லவரே
    நன்றி ஐயா நாள் முழுதும்
    வாழ்நாளெல்லாம்...
 
2. உலகமும் பூமியும் தோன்று முன்னே
    என்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே (2)
    நல்லவரே வல்லவரே...
    காலைதோறும்...
 
3. துன்பத்தைக் கண்ட நாட்களுக்கு
    ஈடாக என்னை மகிழச் செய்யும் (2)
    நல்லவரே வல்லவரே...
    வாழ்நாளெல்லாம்...
 
4. அற்புத செயல்கள் காணச் செய்யும்
    மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும்
 
5. செய்யும் செயல்களை செம்மைப் படுத்தும்
    செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும்
 
6. நாட்களை எண்ணும் அறிவைத் தாரும்
    ஞானம் நிறைந்த அறிவைத் தாரும்
 
7. ஆயுள் நாட்கள் எழுபது தான்
    வலிமை மிகுந்தோர்க்கு எண்பது தான்
 
8. ஆயிரம் ஆண்டுகள் உம் பார்வையில்
    கடந்து போன ஓர் நாள் போல