பாரீர் அருணோதயம் போல்
பாரீர் அருணோதயம் போல்
உதித்து வரும் இவர் யாரோ
(பாரீர்..)
முகம் சூரியன் போல் ப்ரகாசம்
சத்தம் பெருவெள்ள இரைச்சல் போல
(முகம் ...)
இயேசுவே... ஆத்ம நேசரே
சாரோனின் ரோஜாவும் லீலி புஷ்பமும் ஆ....
பதினாயிரங்களில் சிறந்தோர்..
பதினாயிரங்களில் சிறந்தோர்...
காட்டு மரங்களில் கிச்சிலி போல்
எந்தன் நேசர் அதோ நிற்கிறார்
(காட்டு ..)
நாமம் ஊற்றுண்ட பரிமளமே
இன்பரசத்திலும் அதிமதுரம்
(நாமம் ..)(இயேசுவே..)
என் பிரியமே ரூபவதி
என அழைத்திடும் இன்ப சத்தம்
(என் ..)
கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன்
(கேட்டு ..)(இயேசுவே..)
என் நேசர் என்னுடையவரே
அவர் மார்பினில் சாய்ந்திடுவேன்
என் ..
மணவாளியே வா என்பாரே
நானும் செல்லுவேன் அந்நேரமே
மணவாளியே ..
(இயேசுவே ..)
