பாடித் துதி மனமே

bookmark

பாடித் துதி மனமே
பரனைக் கொண்டாடித் துதி தினமே.
 
நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப்   - பாடி

1. தீர்க்ககதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
செப்பின தேவபரன் இந்தக் காலத்தில்
மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
விளக்கின அன்பை விழைந்து தியானித்துப் - பாடி

      

2. சொந்த ஜனமான யூதரைத் தள்ளித்
தொலையில் கிடந்த புறசாதியாம் எமை
மந்தையில் சேர்த்துப் பராபரன் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப்   - பாடி