நான் பாவி தான்

bookmark

நான் பாவி தான் - ஆனாலும் நீர்

மாசற்ற இரத்தம் சிந்தினீர்;

வா என்று என்னைக் கூப்பிட்டீர், என் மீட்பரே வந்தேன்.

 

நான் பாவி தான் - என் நெஞ்சிலே

கறை பிடித்திருக்குதே

என் கறை நீங்க இப்போதே என் மீட்பரே, வந்தேன்.

 

நான் பாவி தான் - பயத்தினால்

அலைந்து பாவ பாரத்தால்

அழிந்து மாண்டு போவதால், என் மீட்பரே வந்தேன்.

 

நான் பாவி தான் - மெய்யாயினும்

சீர் நேர்மை செல்வம் மோட்சமும்,

உம்மாலே பெற்று வாழவும், என் மீட்பரே, வந்தேன்.