தூபம் போல் என் ஜெபங்கள்
தூபம் போல் என் ஜெபங்கள்
ஏற்றுக் கொள்ளும் ஐயா
மாலைபலிபோல் என் கைகளை
உயர்த்தினேன் ஐயா
உம்மை நோக்கி கதறுகிறேன்
விரைவாய் உதவி செய்யும்
1. என் குற்றங்கள் நீர் மனதில் கொண்டால்
நிலைதிற்க முடியாதையா
மன்னிப்புத் தருபவரே
உம்மைத்தான் தேடுகிறேன்
2. விடியலுக்காய் காத்திருக்கும்
காவலனைப் பார்க்கிலும்
என் நெஞ்சம் ஆவலுடன்
உமக்காய் ஏங்குதையா
3. என் வாய்க்கு காவல்வையும்
காத்துக் கொள்ளுமையா
தீயன எதையுமே - நான்
நாட விடாதேயும்
4. என் கண்கள் உம்மைத்தானே
நோக்கி இருக்கின்றன
அடைக்கலம் புகந்தேன் - நான்
அழிய விடாதேயும்
5. என் கண்ணீரை உம்தோற்பையிலே
சேர்த்து வைத்திருக்கிறீர்
அலைச்சல் அனைத்தையும்
அறிந்து இருக்கிறீர்
6. இடர் (தடை)களெல்லாம் நீங்கும்வரை
புகலிடம் நீர்தானையா
எனக்காய் யாவையுமே
செய்து முடிப்பவரே
