சத்திய வேதத்தை தினம் தியானி
சத்திய வேதத்தை தினம் தியானி,
சகல பேர்க்கும் அதபிமானி.
அனுபல்லவி
உத்தமஜீவிய வழிகாட்டும், உயர்வானுலகில் உனைக்கூட்டும்,
சரணங்கள்
1.வாலிபர்தமக்கூண் அதுவாகும் வயோதியர்க்கும் அதுணவாகும்;
பாலகர்க்கினிய பாலும் அதாம் படிமீ தாத்மபசி தணிக்கும்.
2.சத்துருப் பேயுடன் அமர்புரியும் தருணம் அது நல் ஆயுதமாகும்;
புத்திரர் மித்திரரோடு மகிழும் பொழுதும் அதுநல் உறவாகும்.
3.புலைமேவிய மானிட ரிதயம் பெறுதற்கதுமருந்தாய்;
நிலையா நரர்வாணாள் நிலைக்க நேயகாய கற்பம் அதாம்.
4.கதியின் வழிகாணாதவர்கள் கண்ணுக்கரிய கலிக்கம் அது;
புதிய எருசாலேம்பதிக்குப் போகும் பயணத்துணையும் அது
