கல்வாரியின் கருணையிதே
கல்வாரியின் கருணையிதே
காயங்களில் காணுதே
கர்த்தர் இயேசு பார் உனக்காய்
கஷ்டங்கள் சகித்தாரே
விலையேறப் பெற்ற திரு இரத்தமே - அவர்
விலாவில் நின்று பாயுதே
விலையேறப் பெற்றோனாய் உன்னை மாற்ற
விலையாக ஈந்தனரே
பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ
இவ்வன்புக் கிணையாகுமோ
அன்னையிலும் அன்பு வைத்தே
தன் ஜீவனை ஈந்தாரே
சிந்தையிலே பாரங்களும்
நிந்தனைகள் ஏற்றவராய்
தொங்குகிறார் பாதகன் போல்
மங்கா வாழ்வளிக்கவே
