கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும்

bookmark

கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்
அவர் பேரன்பு என்றுமுள்ளது
 
1.  ஒருவராய் மாபெரும்
அதிசயங்கள் செய்தாரே
வானங்களை ஞானமாய்
உண்டாக்கி மகிழ்ந்தாரே
 
இன்று போற்றி புகழுவோம்
நாம் உயர்த்தி மகிழுவோம் - (2)
 
2.  பகலை ஆள்வதற்கு
கதிரவனை உருவாக்கினார்
இரவை ஆள்வதற்கு
சந்திரனை உருவாக்கினார்
 
3.  செங்கடலை இரண்டாக
பிரித்து நடக்கச் செய்தார்
வனாந்திர பாதையிலேää
ஜனங்களை நடத்திச் சென்றார்
 
4.  தாழ்மையில் இருந்த
நம்மையெல்லாம் நினைவுகூர்ந்தார்
எதிரியின் கையினின்று
        விடுவித்துக் காத்திக் கொண்டார்