உம்முன்னே எனக்கு
உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு
உம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு
நிறைவான மகிழ்ச்சி நீரே
நித்திய பேரின்பமே
1. என்னை காக்கும் இறைவன் நீரே
உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்
என்னையாளும் தலைவர் நீரே
உம்மையன்றி ஆசைவேறயில்லை
என்னைக் காக்கும் இறைவன் நீரே அரசாளும் தலைவர் நீரே
ஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை
2. எனக்குரிய பங்கும் நீரே
பரம்பரை சொத்தும் நீரே
ஆலோசனை தரும் தகப்பனே
இரவும் பகலும் பேசும் தெய்வமே
எனக்குரிய பங்கு நீரே பரம்பரை சொத்து நீரே
ஆராதனை உமக்கே...
3. எப்போதும் என் முன்னே
உம்மைத் தான் நிறுத்தியுள்ளேன்
வலப்பக்கத்தில் இருப்பதனால்
அசைவுற விடமாட்டீர்
எப்போதும் என் முன்னே உம்மைத் தான் நிறுத்தியுள்ளேன்
ஆராதனை உமக்கே...
4. என் இதயம் மகிழ்கின்றது
என் உடலும் இளைப்பாறுது
ஜீவமார்க்கம் எனக்குப் போதித்தீர்
ஜீவனே உம்மைப் பாடுவேன்
என் இதயம் மகிழ்கின்றது என் உடலும் இளைப்பாறுது
ஆராதனை உமக்கே...
