இயேசு மானிடனாய்ப் பிறந்தார்

bookmark

இயேசு மானிடனாய்ப் பிறந்தார்
இந்த லோகத்தை மீட்டிடவே
இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்
இந்த நற்செய்தி சாற்றிடுவோம்
 
1. மேய்ப்பர்கள் இராவினிலே - தங்கள்
   மந்தையாய் காத்திருக்க
   தூதர்கள் வானத்திலே தோன்றி
   தேவனை துதித்தனரே     - இயேசு

2. ஆலொசனைக் கர்த்தரே இவர்
   அற்புத மானவரே
   விண் சமாதான பிரபு சர்வ
    வல்லவர் பிறந்தனரே     - இயேசு

3. மாட்டுத்தொழுவத்திலே - பரன்
   முன்னிலையில் பிறந்தார்
   தாழ்மையை பின் பற்றுவோம் - அவர்
   ஏழையின் பாதையிலே    - இயேசு!