இயேசு மானிடனாய்ப் பிறந்தார்
இயேசு மானிடனாய்ப் பிறந்தார்
இந்த லோகத்தை மீட்டிடவே
இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்
இந்த நற்செய்தி சாற்றிடுவோம்
1. மேய்ப்பர்கள் இராவினிலே - தங்கள்
மந்தையாய் காத்திருக்க
தூதர்கள் வானத்திலே தோன்றி
தேவனை துதித்தனரே - இயேசு
2. ஆலொசனைக் கர்த்தரே இவர்
அற்புத மானவரே
விண் சமாதான பிரபு சர்வ
வல்லவர் பிறந்தனரே - இயேசு
3. மாட்டுத்தொழுவத்திலே - பரன்
முன்னிலையில் பிறந்தார்
தாழ்மையை பின் பற்றுவோம் - அவர்
ஏழையின் பாதையிலே - இயேசு!
