இயேசுவை நோக்கி

bookmark

இயேசுவை நோக்கி பார்த்திடுவோம்
அவரையே கண்முன் நிறுத்திடுவோம்
அவர் செயல்களுக்காய் பாடிடுவோம்
அவர் நினைவாக வாழ்ந்திடுவோம்
ஆமென் அல்லேலூயா - 4
 
1.  நம் கால் இடற விடமாட்டார்
   நம்மைக் காப்பவர் உறங்க மாட்டார்
   நம் தேவன் அவரோ அயர்வதில்லை
   நம் நினைவாக வாழ்கின்றார்
   -ஆமென்
 
2.  போகும் போதும் காக்கின்றார்
   திரும்பும் போதும் காக்கின்றார்
   இப்போதும் எப்போதும் காக்கின்றார்
   இனியும் நமக்கு பயமேது
   -ஆமென்
 
3.  நம்துன்பம் கண்டு கலங்குகிறார்
   நமக்காய் கண்ணீர் வடிக்கின்றார்
   நம்பாவம் அனைத்தும் சுமந்து கொண்டு
   நமக்காய் பரிந்து பேசுகின்றார்
   - ஆமென்