இணையில்லா இறைவனின் திருப்புகழை

bookmark

அனைவரும் இணைந்தே பாடிடுவோம் (2)

1. அருள் நிறை ஆயன் அக்களித்து
ஆனந்தத்தில் நம்மை மூழ்கடித்து (2)
பரம்பொருள் அவன் பாதம் தனையே நாம்
பரிவுடன் போற்றி வாழ்ந்திடுவோம் (2)

2. வானுற உயர்ந்த மலைகளுமே
வண்ண எழில் நிறை மலர்களுமே (2)
உனைத் தேடும் சின்ன உயிர்களுமே நிதம்
உன்னத இறைவனை வாழ்த்திடுமே (2)