வேள்விப் படலம் - 474
தேவர்கள் இராமபிரானைப் பாராட்டுதல்
474.
புனித மா தவர் ஆசியின் பூ
மழை பொழிந்தார்;
அனைய கானகத்து மரங்களும்
அலர் மழை சொரிந்த;
முனியும். அவ் வழி வேள்வியை
முறைமையின் முற்றி.
இனிய சிந்தையன். இராமனுக்கு
இனையன இசைத்தான்.
புனித மாதவர்- புனிதமான தவமுனிவர் எல்லோரும்; ஆசியின்
பூமழை பொழிந்தார் - ஆசிமொழிகளாகிய மலர்மாரி பொழிந்தனர்;
அனைய கானகத்து மரங்களும் - அந்தக் காட்டில் உள்ள பல வகை
மலர்மரங்களும்; அலர் மழை சொரிந்த - மலர்மழை பொழிந்தன;
அவ்வழி முனியும் - அப்போது விசுவாமித்திர முனிவனும்;
வேள்வியை முறைமையின் முற்றி - வேள்வியை முறைப்படி செய்து
முடித்து; இனிய சிந்தையன் - மகிழ்ந்த மனம் உடையவனாய்;
இராமனுக்கு இனையன இசைத்தான் - இராமபிரானைப் பார்த்துப் பின்
வருமிவற்றைச் சொல்லலானான்.
புனிதம்: தூய்மை. மாதவர்: சிறந்த முனிவர்கள். ஆசி: ஆசிமொழி.
பொழிதல்: மிகப் பொழிதலாம். வினை உருவகம். அனைய: அந்த.
கானகம்+அத்து: கானகத்து. இதில் ‘அத்து’ சாரியை. அலர்: நன்கு
விரிதல். முற்றி: நிறைவேற்றி. இனிய சிந்தையன் என்பதை
இராமனுக்குக் கூட்டி உறை கூறினும் அமையும். இசைத்தல்:
சொல்லுதல் 55
