வேள்விப் படலம் - 456
வாமனன் இந்திரனுக்கு விண்ணுலகம் ஈந்து
தன் முன்னையிடம் சேர்தல்
456.
‘’உரியது இந்திரற்கு இது’’ என்று.
உலகம் ஈந்து போய்.
விரி திரைப் பாற்கடல்
பள்ளி மேவினான்;
கரியவன். உலகு எலாம்
கடந்த தாள் இணை
திருமகள் கரம் தொடச்
சிவந்து காட்டிற்றே!
உரியது இந்திரற்கு இது என்று- இம்மூவுலகாட்சியும் இந்திரனுக்கே
உரிமை உடையது என்று கூறி; ஈந்து போய் - அவற்றை அந்த
இந்திரனுக்கு தந்து போய்; விரிதிரைப் பாற்கடல் பள்ளி மேவினான்
- விரிந்த அலைகளை உடைய பாற்கடல் படுக்கையை அடைந்தான்;
உலகு எலாம் கடந்து - மூவுலகத்தையும் அளந்த; கரியவன்
தாள் இணை - கருமை நிறம்வாய்ந்த அத்திருமாலின் பாதங்கள்;
திருமகள் கரம் தொட - திருமகளான இலக்குமி தொட்டு வருடவே;
சிவந்து காட்டின - செந்நிறம் கொண்டு விளங்கின.
உரியது: உரிமை உடையது. இந்திரன்: வானவர்க்கு அரசன். பள்ளி:
படுக்கை. கரியவன். கருநிறம் உடையவன். கரி: சாட்சி. உலகுக்குச்
சாட்சி யானவன். என்றும் கூறுவர். தாளிணை: இரண்டு பாதங்கள்.
திருமகள்: பெரிய பிராட்டி. கரம்: கை இவ்வாறு மாவலி வரலாற்றை
முனிவன் கூறினான். 37
