வேள்விப் படலம் - 451

bookmark

451.

‘எடுத்து ஒருவர்க்கு ஒருவர் ஈவதனின் முன்னம்
தடுப்பது நினக்கு அழகிதோ. தகவு இல் வெள்ளி?
கொடுப்பது விலக்கு கொடியோய் உனது சுற்றம்
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றிவிடுகின்றாய்!*
 
தகவு   இல்வெள்ளி   -   பெருந்தன்மை  இல்லாத   சுக்கிரனே;
ஒருவருக்கு ஒருவர் எடுத்து ஈவதனின் முன்னம் - நாடி வந்திருக்கும்
ஒருவருக்கு  உடையவர்   ஒருவர்  பொருளை  எடுத்துக் கொடுப்பதற்கு
முன்பு;  தடுப்பது  நினக்கு  அழகிதோ  - கொடுக்க வேண்டாமெனத்
தடுப்பது  உனக்கு அழகாகுமோ?; கொடுப்பது விலக்கு கொடியோய் -
ஈவதை  விலக்கும்  கொடிய  குணம் கொண்டவனே!; உனது சுற்றம்  -
உன்னைச்   சார்ந்து  நிற்கும்  உனது   சந்ததியானது;  உடுப்பது?வும்
உண்பதுவும் இன்றி - உடுக்கத் துணியும். உண்ணஉணவும் இல்லாமல்;
விடுகின்றாய்   -   விடுகின்றாய்  என்பதை அறிவாயாக.

‘’கொடுப்பது   அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் - உண்பதூஉம்
இன்றிக்  கெடும்’’  என்ற  குறளை  நினைந்து  பாடிய  செய்யுள்  இது.
ஈவது:  கொடுப்பது  ‘அழகிதோ’  இதில்  ஓகாரம்   எதிர்மறை வினாப்
பொருள்   தந்து   நின்றது.   தகவு:  தகைமை.   சுற்றம்:   இனத்தார்.
கொடுப்பதைத் தடுத்த வெள்ளியைத் தகவில் வெள்ளி என்றார்.     32