வேள்விப் படலம் - 442
வாமனன் மாவலியைப் பாராட்டுதல்
442.
‘ஆண்தகை அவ் உரை கூற. அறிந்தோன்.
‘’வேண்டினர் வேட்கையின் மேற்பட வீசி.
நீண்ட கையாய்! இனி. நின்னுழை வந்தோர்
மாண்டவர்; அல்லவர் மாண்பு இலர்’’ என்றான்.
ஆண்தகை அவ்வுரை கூற - வீரம் மிக்க மாவலி அவ்விதமாகச்
சொல்லவே; அறிந்தோன் - அனைத்தும் அறிந்தவனாகிய
அவ்வாமனமூர்த்தி; வேண்டினர் வேட்கையின் மேற்பட வீசி நீண்ட
கையாய் - வேண்டி வந்தவர்களது விருப்பத்துக்கு மேற்படும்படி வாரி
வழங்கிஅதனால் நீண்டிருக்கும் கைகளை உடையோய்!; இனி நின்
உழை வந்தோர் மாண்டவர் - உன்னிடம் வந்தவர்கள்
மாண்புடையவராவர்; அல்லவர் மாண்பிலர் என்றான் - அல்லாதவர்
மாட்சியில்லாதவரே என்றான்.
ஆண்தகை: வீரம் பொருந்தியவன் (இங்கு மாவலி). தனக்குத் தீங்கு
வருவது கண்டும் மேற்கொண்ட செயலில் ஊக்கமுடையவன்
என்பதைக் குறிக்கும். வேண்டினர்: வேண்டி வந்த இரவலர். வேட்கை:
விருப்பம். நீண்ட கை: கொடையில் நிண்ட கை; (தருகை நீண்ட கை).
‘நின்னுழை’ இதில் ‘உழை’ ஏழனுருபு. வீசுதல்: வழங்குதல்.
மாவலி அவ்வாறு கூற. வாமனன். வேண்டிவந்து கேட்பவர்களின்
விருப்பத்துக்கும் மிகுதியாக வழங்கும் நீண்ட கையுடையவனே!
உன்னிடம் வந்ததடைந்தவர்கள் மாண்புடையர். அல்லாதவர்கள்
மாண்பில்லார் என்று பாராட்டினான் என்பது கருத்து. 23
