மிதிலைக் காட்சிப் படலம் - 709

bookmark

709.

‘கொள்ளை கொள்ளக் கொதித்து எழு பாற்கடல்
பள்ள வெள்ளம் எனப் படரும் நிலா.
உள்ள உள்ள உயிரைத் துருவிட.
வெள்ளை வண்ண விடமும் உண்டாம்கொலோ?
 
கொள்ளை     கொள்ள  -  (உலக  முழுவதையும்)   கொள்ளை
கொள்வதற்கு;  கொதித்து  எழு -  பொங்கி  எழுகின்ற;   பாற்கடல்
பள்ளம் - ஆழமான பாற்கடலினது;  வெள்ளம்  என  -   வெள்ளம்
போல;  படரும்  நிலா - பரவியுள்ள நிலாவானது; உள்ள  உள்ள -
நான் (அந்த  நங்கையை)  நினைப்பதனால்  தரித்துள்ள;   உயிரை -
என்  உயிரை; துருவிட -  அரிப்பதால்;   வெள்ளை   வண்ணம் -
வெண்மை நிறமுள்ள;  விடமும் - ஒரு நஞ்சும்; உண்டாம்  கொல் -
லகில் உள்ளதோ?    

கொள்ளை கொள்ளுதல்: ஒருங்கே கவர்ந்து தன்வசமாக்குதல். நஞ்சு
கரிய  நிறமுடையது  என்று  கூறுவது  மரபு. ஆனால்.  நிலா என்னும்
வெள்ளை   நிறமுடைய      விடம்  காணப்படுகிறதே!  என்று காதல்
நோயால்  வருந்தும்   இராமன்   தன்னை  வருத்துகின்ற  நிலாவைப் 
பழித்து  கூறுகின்றான்.   கொள்ளை  கொள்ளக்  கொதித்தெழு  நிலா:
எனது உயிரை  நானும்  அறியாமல் கவர்ந்து செல்வதற்குச்  சீறியெழும்
நிலா என்றும் உரைக்கலாம்.                                 146