மிதிலைக் காட்சிப் படலம் - 703

bookmark

சீதையின் உருவெளிப்பாடுகண்டு இராமபிரான்
தன்னுட்கூறுதல் (703-710)

சீதையின் உருவெளிப்பாடு கண்ட இராமனின் நிலை 
 
703.

‘விண்ணின் நீங்கிய மின் உரு. இம் முறை.
பெண்ணின் நல் நலம் பெற்றது உண்டேகொலோ?
எண்ணின். ஈது அலது என்று அறியேன்; இரு
கண்ணினுள்ளும் கருத்துளும் காண்பெனால்.
 
விண்ணின்    நீங்கிய -  மேகத்திலிருந்து  நீங்கின;  மின்உரு -
மின்னலின் வடிவம்;  இம்முறை - இவ்வாறு; பெண்ணின் நல்நலம் -
பெண்ணின் பேரழகை;  பெற்றது  - அடைந்துள்ள தன்மை; உண்டே
கொலோ-உண்டோ?; எண்ணின்-ஆராய்ந்து பார்த்தால்;  ஈது அலது
ஒன்று     அறியேன் -  (என் கண்ணிற்குப்  புலப்படுகின்ற) இந்தப்
பெண்  வடிவம்  கொண்டு வந்தது வேறு அன்று என்று  சொல்வதற்கு
இல்லை   (ஏனென்றால்);   கண்ணினுள்ளும்  -  (இந்த  வடிவத்தை)
கண்களிலும்;  கருத்துளும்  -  மனத்துள்ளும்; காண்பென்  - (நான்)
காண்கிறேன்.   

சீதையின்     உருவம்  அடுத்தடுத்துத்  தோன்றியும்    மறைந்தும்
நிகழ்வதற்கு   மின்னல்   உருவம்   ஏற்புடைத்தால்  அறியத்   தகும்.
புறக்கண்ணாலும்    அகக்கண்ணாலும்   காண்கின்றேன்    என்பதைக்
கண்ணினுள்ளும்     கருத்துளும்    காண்பேன்   எனக்    குறித்தார்.
காண்பென்: கால வழுவமைதி.                               140