மிதிலைக் காட்சிப் படலம் - 684

bookmark

அம்பரீடற்கு ரிசீகன் மகற்கொடை நேர்தல்

684.

‘நல் தவ ரிசிகன் வைகும்
   நனை வரும் பழுவம் நண்ணி.
கொற்றவன் வினவலோடும்.
   இசைந்தனர்; குமரர்தம்முள்
பெற்றவள். “இளவல் எற்கே”
   என்றனள். பிதா. “முன்” என்றான்;
மற்யை மைந்தன் நக்கு.
   மன்னவன்தன்னை நோக்கி.
 
கொற்றவன் - (அவ்வாறு சென்ற) அம்பரீடன்; நல் தவம் ரிசிகன்
- சிறந்த தவ  முனிவனான ரிசிகன்; வைகும் நனைவரும் -  வசிக்கும்
அரும்பு   மலரும்;   பழுவம்  நண்ணி  -  சோலையை  அடைந்து;
வினவலோடும் - (வந்த செய்தி கூறி அவனுடைய மக்களில் ஒருவனை
விலைக்கு) கேட்ட  அளவில்;  இசைந்தனர்  குமரர் தம்முள் - தன்
புதல்வர்களாக அமைந்த  மூவருள்;  இளவல்  எற்கே - இளையவன்
எனக்கே உரியவன் (அவனை விற்க முடியாது); என்றனள்  பெற்றவள்
- என்று சொன்னாள் தாயான ரிசிகன் மனைவி; பிதா முன்  என்றான்
-   தந்தையோ  மூத்தவன்  தனக்கே  உரியவன்  என்று சொன்னான்;
மற்றைய  மைந்தன்  - எஞ்சி நின்ற நடுப்பிள்ளை யான சுனச்சேபன்
என்பன்;  நக்கு  -  (பெற்றோர்  இருவரும் பெற்று வளர்த்த தன்னை
விலைப்படுத்தற்கு   உடன்பட்டதை   அறிந்து)  சிரித்து;  மன்னவன்
தன்னை நோக்கி - (தான்) அம்பரீட மன்னனைப் பார்த்து.   

பிருகுதுங்க     மலையில்  தங்கியிருந்த  ரிசிகளை   அம்பரீடன்
கண்டான்; தன் கருத்தைத்  தெரிவித்தான். தந்தையோ மூத்த மகனை
விலைக்குத்  தர  இயலாது  என்றான்;  தாயோ இளைய மைந்தனைக்
கொடுக்க முடியாது என்றாள். இது கண்டு வருந்திய நடுப்பிள்ளை தன்
குடும்பத்தின்   வறுமை   அகல  அம்பரீடனிடம்  தன்  இசைவைத்
தெரிவித்தான். முன் - காலவாகு பெயர்.                      121