நகரப் படலம் - 166

bookmark

அயோத்தி நகரில் கல்வியும் செல்வமும் சிறந்தவாறு

166.

கல்லாது நிற்பார் பிறர் இன்மையின். கல்வி முற்ற
வல்லாரும் இல்லை; அவை வல்லர் அல்லாரும் இலை;
எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே.
இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ.
 
கல்லாது  நிற்பார் பிரர் இன்மையின்-  நல்ல  கலை நூல்களைப்
படிக்காது  நிற்பவர்களாகிய வீணர்கள் இல்லாமையாலே;  கல்வி  முற்ற
வல்லாரும் இல்லை- கல்வியில்  முற்றும்  வல்லவர்   என்று   அங்கு
எவரும் இல்லை; அவை வல்லர் அல்லாரும்  இல்லை-  அக் கல்வித்
துறைகளில்  வல்லவரும். அஃது இல்லாதவரும்  இல்லை;  எல்லோரும்
எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தலாலே-  அந்நகரில்  வாழ்பவர்கள்
எல்லோரும்    கல்வி.   பொருள்   ஆகிய    எல்லாச்    செல்வமும்
அடைந்திருப்பதாலே; இல்லரும் இல்லை  உடையார்களும்  இல்லை-
அந்த நகரத்திலே இல்லாதவரும் இல்லை.  உடையவர்களும்  இல்லை.

இப்பாடல்   அந்நகரத்தவரின் அறிவுப் பெருக்கத்தையும்.   செல்வச்
சிறப்பினையும்  தெரிவிக்கிறது.  கல்லாத  வீணரைப்  ‘பிறர்’   என்றார்.
அங்குக்   கற்றவர்-கல்லாதவர்  என்ற  வேறுபாட்டையோ.    செல்வர்.
வறியவர் என்ற வேறுபாட்டையோ காண இயலாது என்பது கருத்து.   74