திரு அவதாரப் படலம் - 256

bookmark

கலைக்கோட்டு முனியை உபசரித்தல்

256.

மா மணி மண்டபம் மன்னி. மாசு அறு
தூ மணித் தவிசிடை. சுருதியே நிகர்
கோ முனிக்கு அரசனை இருத்தி. கொள் கடன்
ஏமுறத் திருத்தி. வேறு. இனைய செப்பினான்;
 
மாமணி    மண்டபம்    மன்னி -   உயர்ந்த      மணிகளால்
அலங்கரிக்கப்பட்ட   அந்த   மண்டபத்தை   அடைந்து:  மாசு  அறு
தூமணித்     தவிசிடை   -   குற்றமற்ற   மணிகளால்    அமைந்த
அரியணையில்;  சுருதியே  நிகர் கோமுனிக்கு அரசனை இருத்தி -
வேதத்துக்               கொப்பான                   கோமுனி
யான     கலைக்   கோட்டு முனிவனை இருக்கச் செய்து; கொள்கடன்
ஏமுறத்திருத்தி  -  அம்முனிவன்  ஏற்றுக் கொள்ளத்தக்க கடமைகளை
மனம் களிக்கும்படி திருத்தமாகச் செய்து;  வேறு இனைய செப்பினான்
- வேறு சிறந்தவையான - பின்வருவனவற்றைக் கூறலானான்.

முதலடி     முற்று மோனை. மண்டபம்: இங்கு வேத்தவை.  மன்னி:
விளங்கி;  மாசு:  அழுக்கு  (குற்றம்);  தூ:  தூய்மை;  தவிசு:  ஆசனம்
(இருக்கை);    சுருதி:    வேதம்;     கொள்கடன்:    வினைத்தொகை:
கடன்:கடமை:  ஏமம்:  அழகு  ஏம்  எனக்  குறுகி  நின்றது. திருத்தல்:
செய்தல்;   செப்புதல்:   கூறுதல்  (திசைச்  சொல்   என்பர்).  அரசர்
தலைவன். முனிவர் தலைவனையே உபசரித்தான் என்பது கருத்து.

மண்டபம்  மன்னி.  கோமுனிக்கரசனை - தவிசிடை இருத்தி -கடன்
திருத்தி - இனைய செப்பினான் என்று இயைக்க.                 77