திரு அவதாரப் படலம் - 192

bookmark

192.

எழுந்தனர்- கறைமிடற்று இறையும். தாமரைச்
செழுந் தவிசு உவந்த அத் தேவும்- சென்று. எதிர்
விழுந்தனர் அடிமிசை. விண்ணுளரொடும்;
தொழும்தொறும். தொழும்தொறும். களி துளங்குவார்
 
கறைமிடற்று  இறையும்- நீலகண்டனாகிய  இறைவனும்;  தாமரைச்
செழும்தவிசு    உவந்த    அத்தேவும்-   தாமரையாகிய   செழித்த
ஆசனத்தனை  விரும்பி  அமர்ந்திருக்கும்   நான்முகனும்;   அடிமிசை
விழுந்தனர்-திருமாலின் திருவடிகளை வணங்கி;  விண்ணுளோரொடும்-
தேவர்களொடும்; எழுந்தனர் எதிர் சென்று- எழுந்தவர்களாகி. அங்குத்
தோன்றிய  திருமாலுக்கு  எதிரே சென்று.  அவரை;  தொழும்தொறும்
தொழும் தொறும்-துதித்துத் தொழும் போதெல்லாம்;  களிதுளங்குவர்-
மகிழ்ச்சியால் ஆடுவாராகி நின்றனர்.

சிவபெருமானும்.    நான்முகனும். தேவர்களும்  திருமாலுக்கு எதிரே
சென்று  அடிதொழுது.  துதித்து.  தொழும் போதெல்லாம்  மகிழ்ச்சியில்
திளைத்து  ஆடுவாராயினர்  என்பது  கருத்து.   கறை:   நஞ்சு. மிடறு:
கண்டம்.  கறைமிடற்றிறை:  சிவபிரான்.  தேவு:  தெய்வம்.   அடிமிசை:
மிசை  ஏழனுருபு.  துளங்கல்: அசைதல் இங்கு ஆடுதலைக்    குறித்தது.
இறை:   ஈசன்   தலைவன்   மேம்பாடுடையவன்  என்னும்   பொருள்
கொண்டது.  கறைமிடற்றிறை  என்பதற்கு  மாறாகக்  கடவுளர்க்கு இறை
என்ற பாடமும் உண்டு.                                      13