திரு அவதாரப் படலம் - 187

bookmark

187.    

வடவரைக் குடுமியின் நடுவண். மாசு அறு
சுடர் மணி மண்டபம் துன்னி. நான்முகக்
கடவுளை அடி தொழுது. அமர கண்டகர்
இடி நிகர் வினையம்அது இயம்பினான் அரோ.
 
வடவரைக்    குடுமியின்  நடுவண் - மேருமலையின்  சிகரத்தின்
மத்தியிலே;   மாசு  அறு சுடர்மணிமண்டபம்  துன்னி -  குற்றமற்ற
ஒளிமிகுந்த  மணிகளாலமைந்த  மண்டபத்தை  அடைந்து;  நான்முகக்
கடவுளை    அடிதொழுது-   (அங்கு   வந்து  சேர்ந்த)   பிரமனை
அடிவணங்கி;    அமரகண்டகர்-   தேவர்களுக்குப்   பகைவர்களான
அரக்கரது;   இடிநிகர்  வினையம்  அது-  இடிபோன்ற அக்கொடும்
செயல்களை; இயம்பினான்- சொல்லலானான்.

வடவரை:  மேருமலை. தேவர்கள் தன்னைக்  காணவருவதை அறிந்த
நான்முகன்   மேருமலைச்   சிகரத்தில் -    மணிமண்டபத்தில்   வந்து
தங்கியிருந்தான். தேவர்கள் உடன்வர. சிவபெருமான்   அங்குச்  சென்று
அரக்கர்தம் கொடுஞ்செயலைக். கூறினார் என்பது கருத்து.

மாசறு     சுடர் மணிமண்டபம்:  தேவர்கள்  கூடி   ஆலோசிக்கும்
மண்டபம்.  கண்டமுகம்:  முள்  அரக்கர்கள்  முள்  போன்று  துன்பம்
விளைவிப்பவர் என்பதால் ‘கண்டகர்’ என்றார்.

வினை: செயல். ‘அம்’  சாரியை  பெற்று  ‘வினையம்’  என  வந்தது
வரை: இருமடி யாகு பெயராய் மலையைக் குறித்தது. அரோ: அசை.   8