திரு அவதாரப் படலம் - 188

bookmark

188.    

பாகசாதனன்தனைப் பாசத்து ஆர்த்து. அடல்
மேகநாதன். புகுந்து இலங்கை மேய நாள்.-
போக மா மலர் உறை புனிதன்.- மீட்டமை.
தோகைபாகற்கு உறச் சொல்லினான்அரோ.
 
அடல்   மேக நாதன்- (இராவணனது மகனாகிய)  வலிமை மிகுந்த
மேக  நாதன்  (இந்திரசித்து)  எனுமரக்கன்;  புகுந்து  பாக  சாதனன்
தனை-   (அமராவதி   நகரக்குள்)  புகுந்து  தேவர்கள்   தலைவனான
இந்திரனை; பாசத்து  ஆர்த்து  - கயிற்றால் கட்டி;   இலங்கை மேய
நாள்- இலங்கைக்குக்  கொண்டு  போன  போது;  போக   மா மலை
உறை புனிதன்  -  இன்பம்.   தரும்  அழகிய  தாமரையில்   வாழும்
புனிதனாகிய பிரமன்.  தான்;   மீட்டமை   தோகை பாகற்கு  உற -
அந்த     இந்திரனை    மீட்டுவந்ததை       உமையொருபாகனாகிய
சிவபெருமானுக்குப் பொருந்த; சொல்லினான்- எடுத்தியம்பினான். 

பாக     சாதனன்: இந்திரன் (புண்ணிய பலன்களை  உயிர்கள் பெற
உதவுபவன்) மேகநாதன்: பிறந்ததும் மேகத்தைப் போல   முழங்கியதால்
இப்பெயர் பெற்றான் என்பர். இந்திரனைப் போரில்  வென்றபின் பெற்ற
சிறப்புப்   பெயரே   “இந்திரசித்து”   என்பது.    மேகநாதனிடமிருந்து
இந்திரனைத்     தான்     மீட்டுவந்ததை.     நான்முகன்.     சிவன்
முதலானவர்களுக்குச் சொன்னான் என்பது கருத்து.                9