திரு அவதாரப் படலம் - 186

bookmark

வசிட்டன் மனத்தில் கருதிய தேவலோக
நிகழ்ச்சிகள் (186-208)

186.    

சுடு தொழில் அரக்கரால் தொலைந்து. வான் உளோர்.
கடு அமர் களன் அடி கலந்து கூறலும்.
படு பொருள் உணர்ந்த அப் பரமன். ‘யான் இனி
அடுகிலேன்’ என மறுத்து. அவரொடு ஏகினான்
 
சுடுதொழில்     அரக்கரால்  -  சுடுகின்ற   தொழிலை  உடைய
அரக்கர்களால்;  வான்  உளோர்  தொலைந்து-   வானுலகில் வாழும்
தேவர்கள்     வாழ்வறிந்து;    சுடு    அமர்களன்     அடிகலந்து
கூறலும்-நஞ்சுதங்கிய  மிடற்றை  உடைய  சிவபெருமானது  பாதங்களை
அடைந்து  தமது  துன்பத்தைக்  கூறலும்; படு  பொருள்   உணர்ந்து
அப்பரமன்- மேலே நிகழவேண்டியவைகளை  முன்னரே  உணர்ந்துள்ள
அப்பெருங்கடவுளான    சிவபெருமான்;    இனியான்   அடுகிலேன்
எனமறுத்து-  இனி  யான்  அரக்கருடன்  போர்புரிய  மாட்டேன் என
மறுத்து   உரைத்து;   அவரொடும்  ஏகினான்-   அவ்வமரர்களுடன்.
நான்முகனது இருப்பிடம் நோக்கிச் சென்றான்.

நினைக்கும்   மனத்தையும் சுடக்கூடிய அத்துணைக்  கொடுந்தொழில்
என்பார்   ‘சுடு  தொழில்’  என்றார்.  சுடு:  நஞ்சு.   களன்:   கழுத்து.
பிறர்க்குத்  துன்பம் விளைவிக்கும் நஞ்சைத்  தானுண்டு.   தேவர்களைக்
காத்தார்   என்பதைக்   குறிப்பிடுவதிது.  படுபொருள்:    மேல்நிகழும்
நிகழ்ச்சி.  சிவபெருமானைப்  பரமன்  (பெருங்கடவுள்)    எனக்  கூறும்
கம்பரது   சமய   சமரசக்    கொள்கை   அறிந்து    மகிழ்தற்குரியது.
‘படுபொருள்’  என்றது  ‘அரக்கர்  இனி  இன்னாரால்  அழிபடுவார்கள்’
என்ற அவ் உண்மையை  அறிந்தமையால்  தான் அடுகிலேன் என்றான்.
என்றார்.                                                  7