திரு அவதாரப் படலம் - 185

bookmark

185.    

அலை கடல் நடுவண். ஓர் அனந்தன் மீமிசை.
மலை என விழி துயில்வளரும் மா முகில்.
‘கொலைதொழில் அரக்கர்தம் கொடுமை தீர்ப்பென்’ என்று.
உலைவுறும் அமரருக்கு உரைத்த வாய்மையை.
 
அலைகடல் நடுவண்-அலைகள் மிகுந்துள்ள பாற்கடல்  நடுவே; ஓர்
அனந்தன்  மீமிசை-  ஒப்பற்ற ‘அனந்தன்’ எனும் பாம்பணை  மேலே;
மலை  என  விழிதுயில் வளரும்- கரியமலை போல.  கண்வளர்கின்ற;
மாமுகில்-  பெரிய மேகம் போன்ற (நிறமும். செயலுமுடைய)  திருமால்;
‘கொலை தொழில் அரக்கர் தம்  கொடுமை  திர்ப்பென்’.  என்று-
உயிர்களைக்    கொல்லுதலே    தொழிலாக    உடைய    அரக்கரின்
கொடுமையைத்   தீர்ப்பேன்   என்று;  உலைவு  உறும்  அமரருக்கு-
அவ்வரக்கர்களால்  வருந்தும்  தேவர்களுக்கு; உரைத்த  வாய்மையை-
சொன்ன வாக்குறுதியை

முந்திய     பாடலில்  ‘எண்ணினான்’ என்பதனுடன்  “வாய்மையை”
என்பது   முடிகிறது.  அலைகடல்  என்று   பொதுவாகக்   கூறினாலும்.
திருமாலின்     உறைவிடமான     ‘பாற்கடல்’    என்று     பொருள்
உரைக்கப்பட்டது.  மீமிசை:  உருபின் மேல் உருபு  வந்து ‘மிக  மேலே’
என்ற  பொருள்  தந்து  நின்றது.  ‘மலை’  என்ற    பொதுச்சொல்லும்
திருமாலைக்    குறிப்பதாதலின்    ‘கரியமலை’    என்ற    பொருளை
உடையதாயிற்று.  தேவர்களுக்கு  அரக்கரால்  மரணமில்லை  என்பதை
உணர்த்த   ‘அமரர்’   என்றார்.   அமரர்:   மரணமற்றவர்.   வல்மை:
வாக்குறுதி.  அடுத்து  வரும்  23 பாடல்கள்  தேவர்களுக்குத்  திருமால்
வாக்குறுதி அளித்த செயலை விரித்துரைப்பனவாகும்.               6