திரு அவதாரப் படலம் - 184
திருமால் கொடுத்த வரத்தினை வசிட்டன்
நினைத்தல் (184-185)
முனிவன் முன்னிய
184.
முரசு அறை செழுங் கடை. முத்த மா முடி.
அரசர்தம் கோமகன் அனைய கூறலும்.
விரை செறி கமல மென் பொகுட்டு மேவிய
வர சரோருகன் மகன் மனத்தில் எண்ணினான்-
முரசு அறை செழுங்கடை- முரசு முழங்கும் கடைவாயிலை
உடையவனும்; முத்தமாமுடி அரசர் தம்கோமகன்- முத்து முதலிய
மணிகளால் அமைந்த மணிமுடி தரித்திருப்பவனுமான. மன்னர்
மன்னனாகிய தயரதன்; அனைய கூறலும் - அத்தகைய சொற்களைச்
சொல்லும் (அது கேட்ட); விரை செறிகமலமென் பொகுட்டு மேவிய-
மணம் செறிந்த தாமரை மலரின் அகவிதழ் உச்சியில்
அமர்ந்திருப்பவராகிய; வரசரோருகன் மகன்- மேலான நான் முகனது
மகனாகிய வசிட்டன்; மனத்தில் எண்ணினான்- (பின்வருவனவற்றை)
தனது மனத்திலே நினைப்பானாயினான்.
முரசு: கொடை. போர். மணம் என்று மூன்று வகையினது. இங்குச்
செழுங்கடை என்றதால் கொடை முரசே முழங்கியது எனலாம்.
முத்தமாமுடி; என்று கூறினும் ‘ஒரு ழொழி தன் இனம் சுட்டும்’
என்றபடி ஏனைய மணிகைளையும் கொள்ளலாம். “அரசர்
நம்கோமகன்” சக்கரவர்த்தி என்ற பொருளில் வந்தது. வாம்:
மேன்மை. சரொருகம்: தாமரை. நீரில் முளைப்பது (சரம்- நீர்;
ருகம்-முளைப்பது) அதிலமர்ந்துள்ள பிரமனுக்குப் பெயராகும்.
‘மனத்தில் எண்ணினான்’ என்றது. தான் முன்பே அறிந்த தாயினும்
அதனை வெளிப்படுத்தலாகாமையால் “மனத்திலெண்ணினான்”
என்றார்.
மகப்பேறின்மை குறித்து. மன்னன் வசிட்டனிடம் கூறி. வருந்த.
அதைக் கேட்ட அம்மாமுனிவன். தேவர்களுக்கு முன்பு திருமால்
அருளியதைச் சிந்தித்தான் என்பது கருத்து. 5
