திரு அவதாரப் படலம் - 180
புதல்வரில்லாக் குறையைத் தசரதன்
வசிட்டனுக்குக் கூறுதல் (180-183)
180.
ஆயவன். ஒரு பகல். அயனையே நிகர்
தூய மா முனிவனைத் தொழுது. ‘தொல் குலத்
தாயரும். தந்தையும். தவமும். அன்பினால்
மேய வான் கடவுளும். பிறவும். வேறும். நீ;
ஆயவன்- (மேலே அரசியல் படலத்தில் கூறிய
அப்பெருமையெல்லாம் பொருந்தியவனான) அந்தத் தயரத மன்னன்;
ஒருபகல் அயனையே நிகர் தூயமாமுனிவனைத் தொழுது- ஒரு நாள்
பிரமனுக்கு ஒப்பாகத் திகழும் தூய்மை பொருந்திய மாமுனிவனாகிய
வசிட்ட முனிவனை வணங்கி; தொல்குலத்தாயரும். தந்தையும்.
தவமும்- பழமை பொருந்திய எமது குலத்தாய்மாரும் தந்தைமாரும்
தவப்பயன்களும்; அன்பினால் மேயவான் கடவுளும்- அன்பு கொண்டு
நான் விரும்பும் கடவுளும்; பிறவும் வேறு நீ- மற்றையோரும்.
வேறுபட்ட உயிர்களும் அனைத்தும் எனக்குத் தாங்களேதாம்.
தவம்: புண்ணியமும்ஆம். வான்: உண்மை என்றும் பொருள்
கூறலாம். ‘பிறவும் வேறும்’ என்பது இங்குக் கூறப்படாத மற்றஎல்லாம்
என்ற பொருள் தந்து நின்றது. வசிட்டரை மன்னன் எப்படி
மதித்துள்ளான் என்பது இதனால் புலப்படும். இது குளகம் நான்காம்
பாடலின் “என்றுளன்” எனவரும் சொல்லுடன் முடியும். 1
