தாடகை வதைப் படலம் - 411
இராமபிரான் தாடகையின் சூலத்தை
இருதுண்டாக்குதல்
411.
மாலும். அக் கணம் வாளியைத் தொட்டதும்.
கோல வில் கால் குனித்ததும். கண்டிலர்;
காலனைப் பறித்து அக் கடியாள் விட்ட
சூலம் அற்றன துண்டங்கள் கண்டனர்.
மாலும் அக்கணம் வாளியைத் தொட்டதும் - திருமாலின்
அவதாரமான ராமபிரான் அக்கணமே அம்பைத் தொடுத்ததும்;
கோல வில் கால் குனித்ததும் - அழகிய தனது வில்லின்
நுனியை வளைத்ததும் ஆகிய செயல்களை; கண்டிலர் -
விண்ணகத்துத் தேவரும் மண்ணில் நின்ற முனிவரும் கண்டாரிலர்;
காலனைப் பறித்து அக்கடியாள் விட்ட - யமனை அவன்
இடத்திலிருந்து பறித்துச் சூலவடிவாக்கி அக்கொடிய அரக்கி வீச
அந்த; சூலம் அற்றன துண்டங்கள் கண்டனர் - சூலம்
சிதைந்துபோய்ப் பலதுண்டங்களாக வீழ்ந்ததைப் பார்த்தனர்.
மால்: அழகு. இங்குத் திருமாலின் அம்சமான ராமனைச் சுட்டியது.
வாளி. அம்பு. தொட்டது: தொடுத்தது. கோலம்: அழகு. வில்கால்:
வில்லின் முனை. குனித்தல்: வளைத்தல். காலன்: எமன். பறித்தல்:
எடுத்தல். கடியாள்: கடுமை உடையவள். அற்றன: வினையாலணையும்
பெயர். பகுதி இரட்டித்துக் காலம் காட்டியது. துண்டம்:
துண்டிக்கப்பட்ட சிறுபகுதி. தாடகை ஏவிய சூலத்தை ராமன்
அழித்தமை கூறப்பட்டது. 48
