தாடகை வதைப் படலம் - 377

bookmark

கணவன் இறந்தமை கேட்டுத் தாடகை
மக்கேளாடு அகத்தியராச்சிரமம் அடைதல்

377.    

‘மற்றவன் விளிந்தமை மைந்தர் தம்மொடும்
பொற்றொடி கேட்டு. வெங் கனலின் பொங்குறா.
‘முற்றுற முடிக்குவென் முனியை’ என்று எழா.
நற்றவன் உறைவிடம் அதனை நண்ணினாள்.
 
விளிந்தமை     - இறந்ததனை; பொற்றொடி - பொன்  வளையல்
அணிந்த  தாடகை; கனல் -  தீ;  பொங்குறா  - பொங்கி; முற்றுற -
அடியோடு  (முழுதும்);  எழா  -  எழுந்து;  நற்றவன்  - அகத்தியன்;
நண்ணினான் - அடைந்தான்.                           20-12