தாடகை வதைப் படலம் - 365
365.
‘சூடக அரவு உறழ் சூலக் கையினள்;
காடு உறை வாழ்க்கையள்; கண்ணின் காண்பரேல்.
ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்!-
‘’தாடகை’’ என்பது அச் சழக்கி நாமமே;*
ஆடவர் கண்ணில் காண்பரேல் பெண்மையை அவாவும்
தோளினாய் - ஆண்களும் உன்னைக் காண்பாராயின்
பெண்தன்மையை விரும்பத் தகுந்த தோளாற்றலுடையவனே; சூடகம்
அரவு உறழ் சூலம் கையினள் - கையணியாகப் பாம்புகளை
உடையவள் சூலம் உடையவள்; காடு உறை வாழ்க்கையள் -
இவ்வனத்தில் வாழும் வாழ்க்கை உடையவள்; அச் சழக்கி நாமம்
தாடகை என்பது - இத்தகைய இக்கொடியவளது பெயர் தாடகை
என்பதாம்.
சூடகம்: கையில் அணியும்அணி (வளையல்). அரவு: பாம்பு.
சூடகமாக அரவுறழ் கை: சூலக்கை எனக்கூட்டி உரை காண்பர்
கையணியாக நாகங்களை அணிந்திருக்கிறாள். சூலம் ஏந்தியிருக்கிறாள்
என்பது பொருள். உறை வாழ்க்கை: வினைத்தொகை. ராமனது
தோளாற்றல் கண்ட ஆண்களும். பெண்மையை அவாவுவர் என்றார்.
அவாவுதல்: விரும்புதல். சழக்கி: கொடியவள். நாமம்: பெயர். கண்டார்
விரும்பும் தோளாற்றல் உடையவன் என்பதால் உலகுயிர்கள். ஆண்.
பெண் அடங்க அனைத்தும் பெண் தன்மையே என்பதும்
கருத்தாம். 24
