எழுச்சிப் படலம் - 826

bookmark

தேரும், யானையும் விளங்குதல்

826.    

சில் இடம் உலகு எனச் செறிந்த தேர்கள்தாம்
புல்லிடு சுடர் எனப் பொலிந்த. வேந்தரால்;
எல் இடு கதிர் மணி எறிக்கும் ஓடையால்.
வில் இடும் முகில் எனப் பொலிந்த. வேழமே.
 
உலகு    சில் இடமென- உலகம் சிறிய  இடத்தையுடையது என்று
சொல்லுமாறு;  செறிந்த   தேர்கள்  தாம்  -  நெருங்கின  தேர்கள்;
வேந்தரால் - (தம்மேல் ஏறியுள்ள) மன்னர்களால்; புல்லிடு சுடரென -
பொருந்திய  கதிரவனைப்  போல;  பொலிந்த - விளங்கின; வேழம் -
யானைகள்;  எல்லிடு   கதிர்மணி   -  சூரியனின்  கதிர்கள்  போல
ஒளிவிடும் இரத்தினங்கள்; எறிக்கும் ஓடையால் - இழைத்த  முகபடாம்
அணிந்திருப்பதால்;  வில்  இடும்  முகிலென  - வானவில் இடப்பட்ட
மேகம்போல; பொலிந்த - விளங்கின.

தேர்     மேல் ஏறியுள்ள  மன்னவர்க்குத்   தேர்மேல்   விளங்கும்
சூரியனும்.  இரத்தினங்கள் இழைத்துச்  செய்யப்பட்ட  நெற்றிப்  பட்டம்
அணிந்த   யானைகளுக்கு  இந்திர   வில்லோடு  கூடிய  மேகங்களும்
உவமையாகும். தேர் உதயமலையாகவும்.  வேந்தர்கள்  சூரியர்களாகவும்.
யானை     முகிலாகவும்.     ஓடை     மின்னலாகவும்      உவமை
கொள்ளத்தக்கன.                                           10