ஆற்றுப் படலம் - 18
வெள்ளம் வணிகரை ஒத்தமை
வணிகர்: வெள்ளம்
18.
மணியும் பொன்னும், மயில் தழைப் பீலியும்,
அணியும் ஆனை வெண்கோடும், அகிலும், தன்
இணை இல் ஆரமும், இன்ன கொண்டு ஏகலான்,
வணிக மாக்களை ஒத்தது - அவ் வாரியே.
மணியும் பொன்னும் மயில்தழைப் பீலியும்-முத்துக்கள் பொன்,
மயில் இறகுகள்; அணியும் ஆனை வெண்கோடும்-அழகுடைய
யானைத் தந்தங்கள்; தன் இணை இல் ஆரமும்-தனக்கு ஒப்பு
இல்லாத சந்தன மரம்; இன்ன கொண்டு ஏகலான்-ஆகிய
இத்தகையவற்றை வாரிச் செல்லுதலால்; அவ்வாரி-சரயுவின் அந்த
வெள்ளம்; வணிக மாக்களை ஒத்தது-வர்த்தகர்களை ஒத்திருந்தது.
தழைப் பீலி - இருபெயரொட்டுப் பண்புத் தொகை. ‘மணி’யை
முத்து எனப் பொருள் கொண்டதால், ஆரம் சந்தன மெரமெனப்
பொருள் கொள்ளப்பட்டது. ஆரம் - முத்து, சந்தனம், மாலை எனப்
பல பொருள் கொண்டது. 7
