அரசியற் படலம் - 170

bookmark

170.

மொய் ஆர்கலி சூழ் முது பாரில். முகந்து தானக்
கை ஆர் புனலால் நனையாதன கையும் இல்லை;
மெய் ஆய வேதத் துறை வேந்தருக்கு ஏய்ந்த. யாரும்
செய்யாத. யாகம் இவன் செய்து மறந்த மாதோ.
 
மொய்  ஆர்கலி சூழ் முது பாரில்- நிறைந்த   கடலால்   சூழ்ப்
பட்டதும்  பழமை  வாய்ந்ததுமான இந்த உலகத்தில்; முகந்து   தானக்
கை ஆர்புனலால்- வாரிமுகந்து. தானம் செய்கின்ற கையில்   நிறைந்த
நீரினால்;   நனையாதன   கையும்  இல்லை  - நனைக்கப்  பெறாத
கைகளும் இல்லை; மெய்யாய வேதத்துறை வேந்தருக்கு-  நிலைபெற்ற
வேத நெறியில்  நிற்கும் அரசர்களுக்கு;  ஏய்ந்த  யாரும்   செய்யாத
யாகம்-பொருந்தியனவான  வேறு  எவரும்  செய்ய  இயலாது    நின்ற
யாகங்கள்;   இவன்   செய்து  மறந்த-  இந்த.   தசரத   மன்னனால்
செய்யப்பட்டு மறக்கப் பெற்றவையாகும்.

மதோ:    அசை. மொய்: வலிமை இங்கு  நிறை  உணர்த்தி நின்றது.
ஆர்கலி:  கடல்  (நிறைந்த  ஓசை  உடையது)   என்பது   பொருளாம்.
‘முதுபார்’ என்றது. உலகின் தொன்மையை   நினைந்தென்க. வேந்தர்க்கு
ஏய்ந்த யாகங்கள். இராச சூயம்- அசுவமேதம்   முதலியனவாகும். வேறு
எவராலும் செய்ய இயலாது நின்ற யாகங்கள் எல்லாம்.  தசரத  மன்னன்
எப்போதோ செய்து மறந்துவிட்டவை.

விட்டவையாம்:      தானக்கை:   தானம்   தரும்   கை.   தானம்
வழங்குவதற்கு  முன்.  நீர்  வார்த்தல்  மரபு. தயரதன்  வார்த்த  நீரால்
நனையாத  கைகளே  இல்லை என்கிறார்  கவி.  இது.    பிறிதினவிற்சி
யணியாம்.                                                 3