அகலிகைப் படலம் - 539
மூவரும் விதேகநாட்டை அடைதல் (539-540)
539.
என்று கூறலும். வியப்பினோடு
உவந்தனர். இறைஞ்சி.
சென்று தீர்ந்தனர் கங்கையை;
விசாலை வாழ் சிகரக்
குன்றுபோல் புயத்து அரசன் வந்து.
அடி இணை குறுக.
நின்று. நல் உரை விளம்பி.
மற்று அவ் வயின் நீங்கா.
விசாலை - இட்சுவாகு - அலம்புசை மகனான விசாலன்
ஏற்படுத்தியது.
விசுவாமித்திரன் கங்கையின் வரலாற்றைக் கூறியபின். மூவரும்
கங்கையைக் கடந்து விசாலையை அடைந்தார் என்பது. 5-30
