அகலிகைப் படலம் - 522

bookmark

மூதாதையர் நற்கதி அடையும் வகையைப்
பகிரதன் வினவ முனிவர் கூறத் தொடங்கல்

522.    

‘ “கொடிய மா முனி வெகுளியின்
   மடிந்த எம் குரவர்
முடிய நீள் நிரயத்தினில்
   அழுந்திடு முறைமை
கடியுமாறு. எனக்கு அருந் தவம்
   அமைகுறு கருமம்.
அடிகள்! சாற்றுக” என்றலும்.
   அந்தணன் அறைவான்:
 
பகீரதன்.     தன்  முன்னோர்  நரகத்தில் அழுந்திடும் தன்மையை
நீக்கும்   விதமே  தனக்கு  அருந்தவம்  என்றும்  அதற்கு  இசைவான
செயலைச் சொல்லுக என்றும் வசிட்டனிடம் கூறினான் என்பது.  

முனிவர்களின்   சாபத்தால்   இறக்கின்றவர்களுக்கு   நற்கதியில்லை
என்பது நூல் துணிபு.                                      5-13