அகலிகைப் படலம் - 523

bookmark

வசிட்டமுனிவன் உபாயம் கூறல்

523.    

‘ “வையம் ஆளுடை மன்னவர்
   மன்னவ! மடிந்தோர்
உய்ய. நீள் தவம் ஒழிவு அறு
   பகல் எலாம் ஒருங்கே.
செய்ய. நாள்மலர்க் கிழவனை
   நோக்கி. நீ செய்தி;
நையல்!” என்று இனிது உரைத்தனன்.
   நவை அறு முனிவன்.
 
மலர்க்கிழவன் - நான்முகன்; நவையறு முனிவன் - வசிட்டன்.

பிரமனை     நோக்கி   நீ   தவம்  செய்தால்  உனது  முன்னோர்
நற்கதியடைய  வேண்டும்   என்ற  உனது   எண்ணம் ஈடேறும் என்று
வசிட்டன் பகீரதனிடம் உரைத்தான் என்பது.                    5-14