ம. பொ. சிவஞானம்
வாழ்க்கை வரலாறு
மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதே ம. பொ. சி. என்று ஆயிற்று. சென்னை விளக்குப் பகுதியிலுள்ள சால்வன் குப்பம் என்ற பகுதியில் 26.6.1906 அன்று பிறந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவரின் பள்ளிப்படிப்பு மூன்றாம் வகுப்போடு முடிந்தது. ம. பொ. சிவஞானம், இந்தியாவைச் சேர்ந்த விடுதலைப் போராட்டக்காரரும், சிறந்த தமிழறிஞரும் ஆவார். இவர் ம.பொ.சி என அறியப்படுபவர். சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக இவர் சிலம்புச் செல்வர் என அழைக்கப்பட்டார்.
சிறப்புகள்
‘சிலம்புச் செல்வர்’ என்ற விருது சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்களால் வழங்கப்பெற்றது. சென்னை, மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தன. மதுரைப் பல்கலைக் கழகம் ‘பேரவைச் செல்வர்’ என்ற பட்டம் வழங்கியது. மத்திய அரசு பத்மஶ்ரீ விருது தந்து போற்றியது. தமிழக மேலவையின் தலைவராக பணியாற்றினார். ’செங்கோல்’ என்ற ஒரு வார இதழை நடத்தி வந்தார். தமிழ் முரசு என்ற இதழை நடத்தினார். சென்னை மாநகராட்சியில் ஆல்டர்மேன் மற்றும் கல்விக் குழுத் தலைவராக பணியாற்றினார். 2006 ஆம் ஆண்டில் இவரது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமையாக்கி சிறப்பித்தது.
மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதே ம. பொ. சி. என்று ஆயிற்று. சென்னை விளக்குப் பகுதியிலுள்ள சால்வன் குப்பம் என்ற பகுதியில் 26.6.1906 அன்று பிறந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவரின் பள்ளிப்படிப்பு மூன்றாம் வகுப்போடு முடிந்தது. ம. பொ. சிவஞானம், இந்தியாவைச் சேர்ந்த விடுதலைப் போராட்டக்காரரும், சிறந்த தமிழறிஞரும் ஆவார். இவர் ம.பொ.சி என அறியப்படுபவர். சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக இவர் சிலம்புச் செல்வர் என அழைக்கப்பட்டார்.
சிறப்புகள்
‘சிலம்புச் செல்வர்’ என்ற விருது சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்களால் வழங்கப்பெற்றது. சென்னை, மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தன. மதுரைப் பல்கலைக் கழகம் ‘பேரவைச் செல்வர்’ என்ற பட்டம் வழங்கியது. மத்திய அரசு பத்மஶ்ரீ விருது தந்து போற்றியது. தமிழக மேலவையின் தலைவராக பணியாற்றினார். ’செங்கோல்’ என்ற ஒரு வார இதழை நடத்தி வந்தார். தமிழ் முரசு என்ற இதழை நடத்தினார். சென்னை மாநகராட்சியில் ஆல்டர்மேன் மற்றும் கல்விக் குழுத் தலைவராக பணியாற்றினார். 2006 ஆம் ஆண்டில் இவரது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமையாக்கி சிறப்பித்தது.
