மிதிலைக் காட்சிப் படலம் - 705
705.
‘அருள் இலாள் எனினும். மனத்து ஆசையால்.
வெருளும் நோய் விடக் கண்ணின் விழுங்காலால்.
தெருள் இலா உலகில். சென்று. நின்று. வாழ்
பொருள் எலாம். அவள் பொன் உரு ஆயவே!
அருள் இலாள் எனினும் - (அவள் என்னிடம்) கருணை
இல்லாதவள் ஆயினும்; மனத்து ஆசையால் - என் மனத்தின்
(அவளிடம் உண்டான) காதலால்; வெருளும் நோய்விட - கலக்கத்தை
உண்டாக்கும் காம நோய் நீங்குமாறு; கண்ணின் - தன் கண்களால்;
விழுங்கலால் - (அவள் என்னை) உட்கொண்டதால்; தெருள் இலா
உலகில் -தெளிவில்லாத இவ்வுலகிலே; சென்று நின்று - அசைவனவும்
இயங்கா தனவுமாகியும; வாழ் பொருள் எலாம் -வாழ்கிற எல்லாப்
பொருள்களும்; அவள் பொன் உரு ஆய-(எனக்கு) அந்த நங்கையின்
பொன்மயமான வடிவமாகிவிட்டன.
அருளிலாள்: இராமன் உற்ற நோயினை அவனை உடனே தழுவித்
தணித்து அருளாதவள். சென்று நின்று வாழ்பொருள் - சர
அசரங்களாகிய பொருள்கள். இதனால் ‘நோக்குவ எல்லாம் அவையே
போறல்’ என்ற அவத்தை கூறப்பெற்றது. சீதையின் திருமேனி
உருக்கிய பொன்னின் நிறத்தை உடையதாதலால் ‘பொன்னுரு’
எனப்பட்டது. 142
