நகரப் படலம் - 146

bookmark

களிப்புடையன இவை எனல்

146.

இடை இடை, எங்கணும், களி அறாதன:-
நடை இள அன்னங்கள்; நளின நீர்க் கயல்;
பெடை இள வண்டுகள்; பிரசம் மாந்திடும்
கட கரி; அல்லன மகளிர் கண்களே!
 
இடை   இடை   எங்கணும்  களி  அறாதன-  இடங்கல்தோறும்
எப்பொழுதும்  மகிழ்ச்சி நீங்காமலிருப்பவை; நடை இள அன்னங்கள்-
அழகிய நடையுடைய  இளமையான அன்னங்களும்; நளின நீர்க்கயல்-
தாமரை     மலர்கள்  பூத்த  நிர்நிலைகளில்  உள்ள  கயல் மீன்களும்;
பெடை  இள வண்டுகள்- தம் பெண் இனத்துடன் கூடி வாழும் ஆண்
வண்டுகளும்;  பிரசம்   மாந்திடும்   கடகரி-  பிரசத்தை  உண்ணும்
மதயானைகளும்;  அல்லன  மகளிர்  கண்களே- இவற்றை அல்லாமல்
பெண்களின் கண்களுமேயாம்.                                54