திரு அவதாரப் படலம் - 271
உதிர்ந்தவற்றையும் சுமித்திரைக்கு அளித்தல்
271.
பின்னும். அப் பெருந்தகை. பிதிர்ந்து விழ்ந்தது
தன்னையும். சுமித்திரைதனக்கு நல்கினான்-
ஒன்னலர்க்கு இடமும். வேறு உலகின் ஓங்கிய
மன்னுயிர்தமக்கு நீள் வலமும். துள்ளவே.
பின்னும் அப்பெருந்தகை - மறுபடியும் அந்தப்
பெருந்தகைமையுள்ள தயரத மன்னன்; பிதிர்ந்து வீழ்ந்தது
தன்னையும் - பொன் தட்டிலே சிதறி வீழ்ந்த பிண்டத்தையும்;
ஒன்னலர்க்கு இடமும் வேறு மன்னுயிர் தமக்குநீள் வலமும்
துன்ன - பகைவர்களுக்கு இடப்புறமும். மற்றும் உலகத்து
உயிர்களுக்கெல்லாம் வலப்புறமும் தோள். கண் முதலியன துடிக்க;
சுமித்திரை தனக்கு நல்கினான் - சுமித்திரைக்கே கொடுத்தான்.
ஆண்களுக்கு இடம் துடித்தல் தீமை. வலம் துடித்தல் நன்மை
என்பதால்: பகைவர்களுக்கு இடமும். மற்றுள்ளோர்க்கு வலமும்
துடித்ததென்றான். மன்னுயிர்: விலை பெற்ற உயிர் (புகழோடு
நிலவுதலாம்). தயரதன் அமுத பிண்டத்தைத் தேவியர் மூவருக்கும்
முறையே கொடுத்துப் பின்னர் பிதிர்ந்து சிதறியவைகளைத் திரட்டி
மறுபடியும் சுமித்திரை கைகளில் கொடுத்தான். இருபங்குகளைப் பெற்ற
சுமித்திரை இரு பிள்ளைகளைப் பெற்றாள் என்பதை அறிகிறோம். 91
